செயலை விட அதன் பயனை நேசித்தால்!
சென்னை:
தமிழக போலீஸ் துறையில் 6.3 சதவீதம் பேர் முஸ்லீம்கள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
பல்வேறு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த விவாதத்திற்கு திங்கள் கிழமை முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
முதல்வர் கூறியதாவது:
கோவையில் மத நல்லிணக்கத்திற்காக கோட்டை அமீர் எனபவர் உயிர் நீத்தார். அவரது தியாகத்தை பாராட்டி அவர் பெயரில்அரசு பதக்கம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் தான் மற்ற மாநிலங்களை விட குற்றங்களின் எண்ணிக்கை குறைவு.
போலீசாரின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு பஞ்சாப்பில் 297 பேர் என்றும், அசாமில் 153 பேர் என்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு 124 போலீசார் என்ற அளவில் தான் உள்ளனர்.
ஆனாலும், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றங்கள் குறைவு.
தமிழக போலீசில் முஸ்லீம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று லத்தீப் புகார் கூறினார்.
89-ம் ஆண்டு வரை உளவு பிரிவு தலைவராக ஜாபர் அலி தான் இருந்தார்.
இப்போதும் முஸ்லீம் அதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.
போலீசாரின் மொத்த எண்ணிக்கையில் 6.3 சதவீதம் பேர் முஸ்லீம்கள்.
அதேபோல் முஸ்லீம்கள் நிறைய பேர் சிறையில் பிடித்துப் போட்பபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டது.
அதுவும் உண்மையல்ல.
தமிழகத்தில் உள்ள 10 சிறைகளில் மொத்தம் 13 ஆயிரத்து 138 கைதிகள் உள்ளனர்.
அவர்களில் 351 பேர்தான் முஸலீம்கள். அதாவது 2,76 சதவீதம்..
காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் மரணம் அடையும் சம்பவங்களையும் குறைத்துள்ளோம்.
96-ல் 13 சம்பவங்கள், 97-ல் 16 சம்பவங்கள், 98-ல் 8, 99-ல் 8 என்ற அளவில் குறைந்து 2000-ல் இதுவரை 1 சம்பவம் என்றுகுறைக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications