செயலை விட அதன் பயனை நேசித்தால்!
சென்னை:
தமிழக போலீஸ் துறையில் 6.3 சதவீதம் பேர் முஸ்லீம்கள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
பல்வேறு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த விவாதத்திற்கு திங்கள் கிழமை முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
முதல்வர் கூறியதாவது:
கோவையில் மத நல்லிணக்கத்திற்காக கோட்டை அமீர் எனபவர் உயிர் நீத்தார். அவரது தியாகத்தை பாராட்டி அவர் பெயரில்அரசு பதக்கம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் தான் மற்ற மாநிலங்களை விட குற்றங்களின் எண்ணிக்கை குறைவு.
போலீசாரின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு பஞ்சாப்பில் 297 பேர் என்றும், அசாமில் 153 பேர் என்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு 124 போலீசார் என்ற அளவில் தான் உள்ளனர்.
ஆனாலும், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றங்கள் குறைவு.
தமிழக போலீசில் முஸ்லீம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று லத்தீப் புகார் கூறினார்.
89-ம் ஆண்டு வரை உளவு பிரிவு தலைவராக ஜாபர் அலி தான் இருந்தார்.
இப்போதும் முஸ்லீம் அதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.
போலீசாரின் மொத்த எண்ணிக்கையில் 6.3 சதவீதம் பேர் முஸ்லீம்கள்.
அதேபோல் முஸ்லீம்கள் நிறைய பேர் சிறையில் பிடித்துப் போட்பபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டது.
அதுவும் உண்மையல்ல.
தமிழகத்தில் உள்ள 10 சிறைகளில் மொத்தம் 13 ஆயிரத்து 138 கைதிகள் உள்ளனர்.
அவர்களில் 351 பேர்தான் முஸலீம்கள். அதாவது 2,76 சதவீதம்..
காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் மரணம் அடையும் சம்பவங்களையும் குறைத்துள்ளோம்.
96-ல் 13 சம்பவங்கள், 97-ல் 16 சம்பவங்கள், 98-ல் 8, 99-ல் 8 என்ற அளவில் குறைந்து 2000-ல் இதுவரை 1 சம்பவம் என்றுகுறைக்கப்பட்டுள்ளது என்றார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications