தமிழகத்தில் இன்று
டெல்லி:
சியாமளா கெளசிக்... இவர் இருக்கும் இடமெல்லாம் இந்திய அழகிகளுக்கு வெற்றி தேடித் தருகிறார். இப்போது சைப்ரஸ் நாட்டுக்கான இந்தியத்தூதராக இருக்கிறார் கெளசிக்.
பிலிப்பின்ஸில் 1994-ல் இவர் இந்தியத் தூதராக இருந்தபோதுதான் சுஷ்மிதா சென் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்தான் உலகஅழகியாக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லாரா தத்தா மிஸ்.யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், சியாமளாதான் சைப்ரஸ் நாட்டின் இந்தியத் தூதராக இருந்தார்.
22 வயதாகும் லாரா தத்தா, 49-வது மிஸ்.யுனிவர்ஸாக சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 78 பேர் இதில் கலந்து கொண்டனர்.
நிகோஷியாவில் நடந்த மிஸ்.யுனிவர்ஸ் போட்டியின்போது, சியாமளாவும் அங்கு இருந்தார். லாரா தத்தாவுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார். 6 ஆண்டுகளுக்குமுன்பு பிலிப்பின்ஸில் சுஷ்மிதா சென் தேர்வுசெய்யப்பட்டபோது, தான் அடைந்த அதே மகிழ்ச்சியை இப்போதும் அடைந்ததாக அப்போது அவர் குறிப்பிட்டார்.
நிகோஷியாவிலிருந்து இந்தியா அப்ராட் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டியில், இந்திய அழகிகளின் அதிர்ஷ்ட முகம் நான்.நிகோஷியாவில் நடந்த இறுதிப் போட்டியின்போது அரங்கினில் 250 இந்தியர்கள் கூடியிருந்தனர். லாரா தேர்வு பெற்றவுடன் அனைவரும் ஆனந்தத்தில்பங்கரா டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டனர்.
துவக்கம் முதலே லாரா தத்தாவுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருந்து வந்தது. முதல் மூன்று இடங்களுக்குள் அவர் எளிதாக வருவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. தனது அழகு, புத்திசாலித்தனமான பேச்சு, கேள்விகளுக்கு சாதுர்யமாக அளித்த பதில்கள் என அனைவரையும் அவர் எளிதில்கவர்ந்தார்.
போட்டியின்போது தனது பெற்றோர்களை, ஹோட்டலுக்குச் செல்லுமாறு அவர் கூறி விட்டார். அவர்கள் அங்கு இருந்தால் தன்னால் சரியாக செய்யமுடியாது என்பதால் அப்படிச் செய்தார் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications