தமிழகத்தில் இன்று
அமெரிக்காவில் துப்பாக்கியைப் பயன்படுத்த கடும் கட்டுப்பாடு: கிளின்டன் பேச்சு
வாஷிங்டன்:
துப்பாக்கியைப் பயன்படுத்த கடுமையான சட்ட திட்டங்கள் இயற்றப்படவேண்டும்என்று அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அன்னையர் தினஊர்வலங்களில் கலந்து கொண்ட பெண்கள் கேட்டுக் கொண்டனர்.
உலகில் வல்லரசு நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் ஆண்டுதோறும்ஆயிரக்கணக்கான பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கின்றனர். அமெரிக்காவில்துப்பாக்கியைப் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாட்டுகளோ, சட்டதிட்டங்களோஏதும் இல்லை. சிறு தகராறு என்றாலும், துப்பாக்கியால் சுடப்பட்டு பலர் இறக்கின்றனர்.மேலும், விளையாட்டாக சிறுவர்களும் துப்பாக்கியைப் பயன்படுத்துவதால் விபத்துஏற்பட்டு அதனாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது.
கடந்த ஆண்டு துப்பாக்கியால் சுமார் 30 பேர் இறந்தனர். இதில் 4000 பேர், 19 வயதுமற்றும் அதற்குக் குறைவான வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், அன்னையர் தினத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் சுமார் 65நகரங்களில் பெண்கள் கலந்து கொண்ட பேரணிகள் நடத்தப்பட்டன. "மில்லியன் மோம்மார்ச் என்ற பெயரில் நடைபெற்ற இப் பேரணிகளில் லட்சக்கணக்கான பெண்கள்கலந்து கொண்டனர். கேபிடல் ஹில் அருகே நேஷனல் மாலில் நடைபெற்ற பேரணியில்8 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
துப்பாக்கிப் பதிவு, துப்பாக்கியில் குழந்தைப் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறுதுப்பாக்கியைப் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என்றுபேரணியில் கலந்து கொண்ட பெண்கள் கேட்டுக் கொண்டனர். கோரிக்கைகளைவலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் அவர்கள் உயர்த்திப் பிடித்துகோஷம் எழுப்பினர். சிலர், துப்பாக்கியால் இறந்த தங்களது குழந்தைகளின்படங்களைக் கொண்டு வந்தனர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அமெரிக்கர்களில் 4 பேரில் ஒருவர்துப்பாக்கியால் பயமுறுத்தப்படுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. உலகிலேயேதுப்பாக்கியால் அதிகம் பயப்படுபவர்கள் அமெரிக்கர்கள் என்றும், அதிகபட்ச உயிர்பாதுகாப்பு அச்சத்தில் இருப்பவர்கள் அமெரிக்கர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
நேஷனல் மாலில் நடைபெற்ற பேரணியைப் பார்வையிட்ட அமெரிக்க அதிபர் பில்கிளின்டன் மற்றும் அவரது மனைவி ஹில்லாரி கிளின்டன் இருவரும், பேரணியில்கலந்து கொண்டவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications