செயலை விட அதன் பயனை நேசித்தால்!

Subscribe to Oneindia Tamil

யாழ். நகரை பிடிக்கும் புலிகளின் முயற்சியை இலங்கை விமானப்படை முறியடித்தது

கொழும்பு:

இலங்கை விமானப் படையின் கடும் தாக்குதல் தொடர்பாக யாழப்பாணம் நகரைப் பிடிக்க விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகஇலங்கை அரசு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நகரைக் கைப்பற்றுவதற்காக கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்துவருகிறது.

இந்த சண்டை திங்கள்கிழமை உச்சகட்டத்தை எட்டியது. யாழ்ப்பாணம் நகருக்குள் ஊடுறுவ விடுதலைப் புலிகள் முயன்றனர். ஆனால் இலங்கை விமானப்படையினர் நடத்திய தொடர் தாக்குதலில் விடுதலைப் புலிகள் பின்வாங்கினர். அவர்களது முயற்சி தோல்வியுற்றதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

பூநகரியிலுள்ள விடுதலைப் புலிகளின் தகவல் தொடர்பு மையத்தை ராணுவம் குண்டு வீசி தகர்த்தது. இதனால் புலிகளின் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நகருக்குள் புலிகள் நுழைவதற்கு வாய்ப்பு உள்ள அனைத்துப் பகுதியிலும் இலங்கை விமானப் படை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுதாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையே, யாழ்ப்பாணம் நகருக்குள் உள்ள ராணுவத்தினருக்குத் தேவையான உணவு. ஆயுதம் ஆகியவை கிடைப்பதில் எந்தத் தடங்கலும் இல்லைஎன்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. கடல் மற்றும் வான் மார்க்கமாக இவை தங்குதடையின்றி வழங்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+