தமிழகத்தில் இன்று
புது தில்லி:
இந்தியாவில் செல்ஃபோன் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்புப்படி சுமார் 18.8 லட்சம் பேர்செல்ஃபோன் பயன்படுத்தி வருகின்றனர்.
நாட்டில் செல்ஃபோன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத் தகவலை மத்திய தகவல்தொடர்புத் துறை இணைஅமைச்சர் தபன் சிக்தர், மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதி வரை எடுக்கப்பட்ட கணக்குப்படி தில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களில் மட்டும் 7 லட்சத்து 95பேர் செல்ஃபோன் வைத்துள்ளனர். நாட்டில் உள்ள மற்ற 18 தொலைத் தொடர்பு வட்டங்களில் சுமார் 10 லட்சம் பேர் செல்ஃபோன்உபயோகிக்கின்றனர்.
அதிகபட்சமாக தில்லியில் மட்டும் 3.32 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் செல்ஃபோன் வைத்துள்ளனர். தில்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 3.19லட்சம் பேரும், கல்கத்தாவில் 90 ஆயிரம் பேரும், சென்னையில் 54 ஆயிரம் பேரும் செல்ஃபோன் உபயோகிக்கின்றனர்.
இந்திய செல்ஃபோன் இயக்குநர்கள் சங்கக் கணக்குப்படி 1999-2000-ம் ஆண்டில் மட்டும் 6.84 லட்சம் புதிய செல்ஃபோன் இணைப்புகள்வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் செல்ஃபோன் தேவை அதிகமாக உள்ளது. உள்நாட்டில் செல்ஃபோன்கள் தயாரிக்கப்படாததால், சமீபத்தியஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கையின் கீழ் வெளிநாடுகளில் இருந்து செல்ஃபோன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
தொலைத்தொடர்புத் துறையின் மூலம் நாட்டில் சில முக்கிய நகரங்களில் செல்ஃபோன் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் செயல்பாட்டைப் பொறுத்துநாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இச் சேவை விரிவுபடுத்தப்படும் என்றார் அமைச்சர் சிக்தர்.
யு.என்.ஐ.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications