தமிழகத்தில் இன்று
புது தில்லி:
இந்தியாவில் செல்ஃபோன் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்புப்படி சுமார் 18.8 லட்சம் பேர்செல்ஃபோன் பயன்படுத்தி வருகின்றனர்.
நாட்டில் செல்ஃபோன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத் தகவலை மத்திய தகவல்தொடர்புத் துறை இணைஅமைச்சர் தபன் சிக்தர், மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதி வரை எடுக்கப்பட்ட கணக்குப்படி தில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களில் மட்டும் 7 லட்சத்து 95பேர் செல்ஃபோன் வைத்துள்ளனர். நாட்டில் உள்ள மற்ற 18 தொலைத் தொடர்பு வட்டங்களில் சுமார் 10 லட்சம் பேர் செல்ஃபோன்உபயோகிக்கின்றனர்.
அதிகபட்சமாக தில்லியில் மட்டும் 3.32 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் செல்ஃபோன் வைத்துள்ளனர். தில்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 3.19லட்சம் பேரும், கல்கத்தாவில் 90 ஆயிரம் பேரும், சென்னையில் 54 ஆயிரம் பேரும் செல்ஃபோன் உபயோகிக்கின்றனர்.
இந்திய செல்ஃபோன் இயக்குநர்கள் சங்கக் கணக்குப்படி 1999-2000-ம் ஆண்டில் மட்டும் 6.84 லட்சம் புதிய செல்ஃபோன் இணைப்புகள்வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் செல்ஃபோன் தேவை அதிகமாக உள்ளது. உள்நாட்டில் செல்ஃபோன்கள் தயாரிக்கப்படாததால், சமீபத்தியஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கையின் கீழ் வெளிநாடுகளில் இருந்து செல்ஃபோன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
தொலைத்தொடர்புத் துறையின் மூலம் நாட்டில் சில முக்கிய நகரங்களில் செல்ஃபோன் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் செயல்பாட்டைப் பொறுத்துநாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இச் சேவை விரிவுபடுத்தப்படும் என்றார் அமைச்சர் சிக்தர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications