For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி மே 22-ம் தேதி தேர்வு

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி மே 22-ம் தேதி அறிவிக்கப்படும்.

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இம் மாதம் 28-ம் தேதி ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர்துவங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன.

இப் போட்டித் தொடருக்கான இந்திய அணி மே 22-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. தற்போது, இந்தியஅணிக்கு25 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் புனேயில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ராகுல் திராவிட்,கங்குலி, கும்ளே ஆகியோர் இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வருவதால், பயிற்சியில் அவர்கள்கலந்து கொள்ளவில்லை.

பயிற்சியின் இடையே மே 22-ம் தேதி 14 பேர் இந்திய அணி அறிவிக்கப்படும். ஏற்கெனவே இவ்வாறுதான்திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இங்கிலாந்தில் இருந்து கஙகுலி மே 22-ம் தேதிக்குள் இந்தியா திரும்ப முடியாதுஎன்பதால் அணித் தேர்வு மே 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்தது.

ஆனால், தற்போதைய நிலவரப்படி மே 21-ம் தேதியே கங்குலி மும்பை வந்துவிடுவார் என்பதால், ஏற்கெனவேஅறிவித்தபடி மே 22-ம் தேதியே இந்திய அணி அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்துள்ளது.

இந்திய வீரர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் பயிற்சி குறித்து அணியின் பயிற்சியாளர் கபில் தேவ்கூறியதாவது:

புனே கிளப்பில் இந்திய வீரர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நிலவும்தட்பவெப்பநிலை வீரர்கள் நல்ல பயிற்சி எடுக்க ஏதுவாக உள்ளது. வீரர்களின் உடலுக்கு நல்ல பயிற்சிஅளிக்கப்படும். காலையில் ஒரு மணி நேரம் உடல் பயிற்சியும், காலை உணவுக்குப் பிறகு நெட் மற்றும் பீல்டிங்பயிற்சியும் அளிக்கப்படும் என்றார் கபில் தேவ்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X