தமிழகத்தில் இன்று
புது தில்லி:
நாட்டின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தி 20 லட்சம் டன் குறையலாம் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர்சுந்தர்லால் பாட்வா தெரிவித்தார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில்செவ்வாய்க்கிழமை கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு அவர் அளித்த பதில்:
நாட்டின் பல மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், உணவுப் பொருள் உற்பத்தி குறைவாகஉள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுமார் 20 லட்சம் டன் அளவுக்கு உணவு உற்பத்திகுறையும்.
கோதுமையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 7 கோடி டன் உற்பத்தி செய்யஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரிசி உற்பத்தி இந்த ஆண்டு 8.8 கோடி டன்னாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 25 லட்சம் டன் அதிகமாகும்.
ஆனால், மற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. இதனால், ஒட்டுமொத்த உணவுப்பொருள் உற்பத்தியில் 20 லட்சம் டன் குறையும்.
உலகில் கோதுமை, அரசி, பழம் மற்றும் காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. நாட்டில்உள்ள மொத்த விவசாய நிலப் பரப்பில் 78 சதவீதம் சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் உள்ளது. இதனால், நவீனவேளாண் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை.
இருப்பினும், வேளாண் துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு பல நல்ல திட்டங்களைத் தீட்டியுள்ளது. வேளாண் திட்டப்பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்றார் பாட்வா.
யு.என்.ஐ.