தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கவர்னர் பாத்திமா பீவி திங்கள்கிழமை இரவு விருந்தளித்தார்.
ராஜ்பவனில் நடைபெற்ற இந்த விருந்தில் முதல்வர் கருணாநிதி, அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விருந்து நிகழ்ச்சி திங்கள் இரவு 7.30 மணிக்கு துவங்கியது.
தமாகா, பாமக, தேசிய லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்விருந்தில் கலந்து கொண்டனர்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததும் ஒவ்வொரு ஆண்டும் கவர்னரும், முதல்வரும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்குவிருந்தளிப்பது வழக்கம்.
அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் விருந்து அளித்தார். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அளிக்கப்பட்ட இவ்விருந்தில் ஆளும் கட்சி மற்றும்தமாகா உள்ளிட்ட எதிர்க் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆனால், அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.