தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்திய உருக்குத் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்தித்து வந்த தேக்க நிலை தற்போது மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அரசுஅறிவித்துள்ளது.
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி விரிவாக்கம் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்திய உருக்குத் துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாக அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் மொத்த உற்பத்தி அளவு 26.48 மில்லியன் டன்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு 23.82 மில்லியன் டன்களாக இருந்தது. இது மொத்தம்11.1 சதவீத வளர்ச்சியாகும்.
திங்கள்கிழமை ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய உருக்குத் துறை இணை அமைச்சர் திலீப் ரே எழுத்து மூலம் அளித்த பதிலில்இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
1999-2000மாவது ஆண்டுக்கான விற்பனை உருக்கின் ஏற்றுமதி 2.99 மில்லியன் டன்னாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டை விடஅதிகமாகும்.
1994-95ல் ஏற்றுமதி அளவு 1.27 மில்லியன் டன்கள் என்ற அளவில் இருந்தது. இது 1997-98ல் 2.38 மில்லியன் டன்களாக அதிகரித்தது. கடந்தசில ஆண்டுகளல் ஏற்றுமதி அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வந்துள்ளது என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.