தமிழகத்தில் இன்று
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில், நெடுஞ்சாலைகளில் வழிப்பறிச் சம்பவங்களில் 40 பேரை ஆப்கானிஸ்தானை ஆட்சி புரிந்து வரும் தலிபான் அமைப்பினர் கொன்றுள்ளதாகதெரிய வந்துள்ளது.
ஈரான் நாட்டு எல்லையில் உள்ள ஃபாரா, ஹெல்மான்ட் ஆகிய இரு மாகாணங்களில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்திக் கொள்ளையடிப்பது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.இத்தகவலை பி.பி.சி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஈரான் நாட்டுக்கு மிக அருகாமையில் உள்ள இந்த மாகாணங்களில் அதிக அளவில் கடத்தலும், கொள்ளை, வழிப்பறியும் நடப்பதால் அதுகுறித்து நடவடிக்கைஎடுக்குமாறு சமீபத்தில் ஈரானில் நடந்த பேச்சுவார்த்தையின்போது தலிபான் அமைப்பு கேட்டுக் கொள்ளப்பட்டது.
கந்தஹாரில் உள்ள தலிபான் அமைப்பினரின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹை முட்டமீன செய்தியாளர்களிடம் கூறுகையில், கொல்லப்பட்ட அனைவரும் முன்னாள்முஜாஹிதீன்கள் (தீவிரவாதிகள்). தனிப்பட்ட சம்பவங்களில் இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications