தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
உத்தரப்பிரதேச பி.ஜே.பியில் லடாய்: முதல்வர் பதவி "ஆட்டம்"

லக்னோ:

தனது ஆட்சியைக் கவிழ்க்க பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் சிலரே சதி செய்வதாக உத்தர பிரதேச மாநில பா.ஜ.க. முதல்வர் ராம் பிரகாஷ்குப்தா கூறியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு உ.பி. சட்டசபை வளாகத்தில் ராம் பிரகாஷ் குப்தாவை 70-க்கும் மேற்பட்ட பாரதீய ஜனதாக் கட்சி எம்.எல்.ஏக்கள்சூழ்ந்து கொண்டு கெரோ செய்தனர்.

இந்த நிலையில் தனது ஆட்சியைக் கவிழ்க்க பாரதீய ஜனதா தலைவர்கள் சிலரே சதி செய்வதாக குப்தா குற்றம்சாட்டியுள்ளார்.

லக்னோவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கல்யாண் சிங் பதவி விலகி நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதலே, எனது ஆட்சியைக்கவிழ்க்கும் முயற்சியை இந்த தலைவர்கள் துவங்கி விட்டனர் என்றார் குப்தா.

இதற்கிடையே, உ.பி. நிலவரம் குறித்து அறிக்கை தருமாறு மாநில பா.ஜ.க. தலைமைக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. நடந்த சம்பவம் குறித்துவிளக்கம் தருமாறும் அது பணித்துள்ளது.

இந்த நிலையில், சட்டசபை பாரதீய ஜனதாக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் ராம் பிரகாஷ் குப்தா ஏற்பாடு செய்துள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+