தமிழகத்தில் இன்று
படியாலா:
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கடந்த ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திச் சென்றவழக்கில் கடத்தல்காரர்களுக்குக் உதவியதாகக் கைதான 3 பேரின் காவல் மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஏர்லைன்ஸ் ஐசி 814 என்ற விமானத்தை ஆப்கானிஸ்தான் தலைநகர் காந்தகாருக்குக் கடத்தல்காரர்கள்கடத்திச் சென்றனர். சில நாட்களுக்குப் பிறகு, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தங்கள் கூட்டாளியுடன்விமானத்தை விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
பின்னர் விமானக் கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் கடத்தல்காரர்களுக்கு உதவியதாகஅப்துல் லத்தீப், புபால்மர் தமாய், தாலிப் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களது நீதிமன்றக் காவல்செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. இவ் வழக்கில் இன்னும் விசாரணை முடிவடையாத நிலையில், காவல்நீட்டிப்புக்காக மூன்று பேரும் பலத்த போலீஸ் காவலுடன் பாடியாலா செஷன்ஸ் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் மூன்று பேர் மீதும் ஆயுதம் மற்றும் வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்களிடம் தனியாக விசாரணை நடத்திய நீதிபதி கே.எஸ். கிரேவால், மே 30-ம் தேதி வரை இவர்களைக்காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
பி.டி.ஐ.