தமிழகத்தில் இன்று
ஹைதராபாத்:
போலீசாருக்கும் மக்கள் போர்ப் படையைச் சேர்ந்த நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில்சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் ஆந்திரப்பிரதேசம் நிஸாாமாபாத் மாவட்டம் தாஸ்நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது.
மக்கள் போர்ப் படையைச் சேர்ந்தவர்கள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் போலீசார் தீவிர வேட்டையாடிய போதுஅங்கேயிருந்த தப்பித்து ஓட முயன்றவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டார்கள்.
இதனால் மக்கள்போர்ப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகளும் எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில்சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று போலீஸ்காரர்கள் இறந்தார்கள்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காபூர் தலைமையில் இவர்கள் மக்கள்போர்ப்படையினருடன் தாக்குதல்நடத்தியபோது இச்சம்பவம் நடந்தது.
இச்சம்பவத்தில் காபூரும், இன்னொரு கான்ஸ்டபிளும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவர்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இன்னொரு கான்ஸ்டபிள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications