For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
நிருபர்களாகும் "அலிகள்"
ரோடாக்: (ஹரியானா)
ஹரியானாவில் பத்திரிக்கைத் துறைகளில் அலிகள் நுழைந்து பல்வேறு கதை, கட்டுரைகள் எழுதி வருகிறார்கள்.
இந்தியில் மங்கல்முக் என்ற மாத இதழ் விரைவில் வெளிவர உள்ளது. இதன் ஆசிரியரான ராம்பாபு ஒரு அலி என்பது குறிப்பிடத்தக்கது.
இளநிலைப் பட்டதாரியான ராம்பாபு பல்வேறு சமூகசேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஹரியானாவில் வெளியாகும் மாலைப்பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியர் ஹர்பன் லால் என்பவர் முன்னிலையில் மங்கல்முக் மாதஇதழை ராம்பாபு செவ்வாய்க்கிழமைவெளியிட்டார்.
அந்தப் புத்தகவெளியீட்டு விழாவில் ராம்பாபு பேசியதாவது:
ஹரியானா அலிகள் அமைப்புத் தலைவர் லீலூ வின் ஆசிர்வாதத்தாலும், ஒத்துழைப்பாலும் தான் இந்த இதழ் உருவாகியுள்ளது. அவருக்கு எனது முழு முதல் நன்றிஎன்று கூறினார்.
இந்தப் புத்தகவெளியீட்டு விழாவில் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, May 17, 2000, 5:30 [IST]