தமிழகத்தில் இன்று
கொழும்பு:
மக்களின் உயிரைக் காக்க பிரபாகரன் போரைக் கைவிட்டு சமாதானப்பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்லட்சுமண் கதிர்காமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் விடுதலைப் புலிகள் தலைவர்பிரபாகரனுக்கு நேரடியாக அவர் கோரிக்கை விடுத்தார். கதிர்காமர் பேட்டி:
17 ஆண்டுகளாகப் போரிட்டு வருகிறீர்கள். இதனால் யாருக்கு என்ன பலன்கிடைத்தது. அப்பாவி மக்கள் உயிர் மட்டுமே பலியாகியுள்ளது. தனி நாடு கோரிஅரசுடன் நீங்கள் மோதுவதால் பலியாகும் அப்பாவி மக்களை இனிமேலாவது விட்டுவிடுங்கள்.
1983-ம் ஆண்டு நடந்த இனப் படுகொலையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள்படுகொலை செய்யப்பட்டனர். இதனால் தமிழ் மக்களும், போராளிகளும் கடும்அதிருப்தியடைந்தனர் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.ஆனால் இப்போது பேசவேண்டிய நேரம் வந்து விட்டது. இதை விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தங்களது போரைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருவதில் விடுதலைப் புலிகளுக்குஎன்ன தயக்கம்?. நல்ல நோக்கத்திற்காக நாங்கள் போராடுகிறோம் என்று அவர்கள்கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் தீர்வுக்கு அவர்கள் முன்வரவேண்டும்.
இன்னும் காலம் கடந்து விடவில்லை. உங்களது கணிப்புகள் தவறான பாதையில்உள்ளது. இலங்கையைப் பிரித்துத் தனி நாடு உருவாவதற்கான வாய்ப்பே இல்லை.அது சாத்தியமே இல்லை.
தமிழர்கள் மத்தியில் பெரும் தலைவராகப் பார்க்கப்படுகிறார் பிரபாகரன். ஆனால்அவர்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறார் பிரபாகரன். இதை ஏன் பிரபாகரன்உணரவில்லை. தனது மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதை அவர் நிறுத்தவேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications