தமிழகத்தில் இன்று
சென்னை:
அரிசி உற்பத்தியில் பஞ்சாப்பை மிஞ்சியது தமிழகம். கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தமிழகம் முதலிடத்தில்இருக்கிறது.
இத்தகவலை சட்டசபையில் புதன் கிழமை முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
அரிசி, கோதுமை உற்பத்தியில் நாட்டிலேயே பஞ்சாப் மாநிலம் தான் முதலிடத்தில் இருந்து வந்தது. இப்போது அரிசி உற்பத்தியில் தமிழகம்முதலிடத்திற்கு வந்து விட்டது. அதேபோல் கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதுதமிழகத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை.
அதேபோல் தமிழகத்திற்கு இன்னொரு சிறப்பும் விரைவில் கிடைக்க உள்ளது.
கம்பெனி விவகாரங்களை விசாரிக்கும் சட்ட ஆணையத்தின் முதன்மை பெஞ்ச் சென்னையில் அமைய உள்ளது.
மத்திய சட்ட அமைச்சகத்திடம் இதை தொடர்ந்து தமிழக அரசு வற்புறுத்தி வந்தது. அதை ஏற்று இந்த அமைப்பை சென்னையில் நிறுவமத்திய சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான முயற்சிகளில் மத்திய வர்த்தக அமைச்சர் மாறனும் ஈடுபட்டார் என்றார் முதல்வர்.