தமிழகத்தில் இன்று
சென்னை:
அடுத்தாண்டு தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஏராளமான வரிச் சலுகைகளை திமுக அரசு வாரி வழங்கிவருகிறது.
மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டிலும் வரி உயர்வு இல்லை. வரிச் சலுகைகளும், வரிக் குறைப்புமட்டுமே இடம் பெற்றன.
அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் வரிச் சலுகைகளை முதல்வர்கருணாநிதி வாரி வழங்கியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் வரிச் சலுகைகளை தான் வாரிவழங்கியுள்ளோம் என்றார் முதல்வர்.
சட்டசபையில் புதன் கிழமை அவர் கூறுகையில்,
கழிவு பஞ்சு மீதான விற்பனை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும். பி.வி.சி. பைப் மீதானவிற்பனை வரி 18 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்படும்.
சைக்கிள் சீட் மீதான விற்பனை வரி 4 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்படும். பாலிதீன் பிளாஸ்டிக்பைகள் மீதான விற்பனை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும்.
வணிக சின்னம் பொரிக்கப்பட்ட பால்கோவா மீதான விற்பனை வரி 16 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாககுறைக்கப்படும். பழைய, பயன்படுத்தப்பட்ட கண்ணாடி பாட்டில்கள், சீசாக்கள் மீதான கொள்முதல் வரி 12சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும்.
முகம் பார்க்கும் கண்ணாடி மீதான விற்பனை வரி 16 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படும்.ஜக்காளம், கம்பளி போன்ற பொருட்கள் மீதான விற்பனை வரி குறைக்கப்படும்.
இந்த வரிக் குறைப்பு ஜூன் 1ம் தேதி தல் அமலுக்கு வரும் என்றார் முதல்வர்.