தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வதுதான் தேசியநலனுக்கு ஏற்றது என்று இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
சாதி மதத்தை கருத்தில் கொள்ளாமல், தகுதி அடிப்படையில் வாய்ப்புகள்வழங்கப்படுமானால், முஸ்லீம்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று நாங்கள் வற்புறுத்த மாட்டோம். யதார்த்த நிலையில் சாதியும், மதமும்தான் சமூக நீதிக்கு வழிகாட்டுகின்றன.
சிறுபான்மை மக்களுக்கு சமூக நீதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையோடு,முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான் பொருளாதாரத்தில் பாதுகாப்புகிடைக்கும். முஸ்லீம்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.
உச்சநீதி மன்ற தீர்ப்பு வந்த பின்னர் இதுபற்றி அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்
இலங்கைப் பிரச்சனையில் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற பொதுவான ரீதியில்மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமையும், அந்தஸ்தும் கிடைக்க வேண்டும்என்பது நமது நீண்டநாள் கோரிக்கை. அதே நேரத்தில் அது பக்கத்து நாட்டு பிரச்சனைஎன்பதையும் மறந்துவிடக் கூடாது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும், தேசிய லீக்கும் இணைவதற்கு நான் தடையாக இருக்கமாட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications