தமிழகத்தில் இன்று
புதுக்கோட்டை:
ஜெயலலிதாவுக்கு எதிராக கொலை மிரட்டல் தெரிவித்ததாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்குஎதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1995-ம் ஆண்டு புதுக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சுவாமி பேசினார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் தெரிவிக்கும்வகையிலும் பேசினார்.
இது தொடர்பாக உள்ளூர் அதிமுக பிரமுகர் ஒருவர் சுவாமிக்கு எதிராக போலீஸில் வழக்குப் பதிவு செய்தார். இதுதொடர்பாக, புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்தவாரம் இவ் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இவ் வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சாரங்க ராஜன், சுவாமிக்கு எதிராக கைது வாரண்ட்பிறப்பித்தார். மேலும், இவ் வழக்கை புதுக்கோட்டை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கும் மாற்றம் செய்துஉத்தரவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications