தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கரூரில் தீ விபத்தில் போலீஸ் நிலையம் சேதம்
சென்னை:
கரூரில் ஒரு வழக்கறிஞர் வீட்டில் பிடித்த தீ, அருகில் இருந்த போலீஸ் நிலையத்துக்கும் பரவியது. இதனால்,போலீஸ் நிலையத்தில் இருந்த ஆவணங்கள் முழுவதுமாக எரிந்து சாம்பலாயின.
கரூர், தென்மலை போலீஸ் நிலையத்துக்குப் பக்கத்தில் வழக்கறிஞர் ராமகோவிந்தன் வசித்து வருகிறார். இவரதுவீட்டின் முன்பு கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை காலை திடீரென்று ஏற்பட்ட மின்கசிவுகாரணமாக கீற்றுக் கொட்டகை தீப்பிடித்தது.
இதனால், கொட்டகைக்குக் கீழே நிறுத்தப்பட்டிருந்த கார், டெம்போ வேன் ஆகியவை எரிந்து சேதமடைந்தன.கொட்டகையில் பிடித்த தீ அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கும் பரவியது. அங்கிருந்த ஆவணங்கள் எல்லாம்தீப்பிடித்து எரிந்தன. உடனடியாக சம்பவ இடத்துக்குப் போலீஸார் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.












Click it and Unblock the Notifications