தமிழகத்தில் இன்று
டெல்லி:
உணவுப் பொருட்கள், உரங்கள் மற்றம் பெட்ரோலியப் பொருட்களின் விலையைஉயர்த்தியதைத் திரும்பப் பெற முடியாது. இதை தேவையில்லாமல் அரசியலாக்குவதைவிட ஏழ்மை, வேலையில்லாமை ஆகிய முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணஅரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
விலை உயர்வை வாபஸ் பெறக் கோரி காங்கிரஸ் தலைவரும், லோக் சபா எதிர்க்கட்சித்தலைவருமான சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் குழுவினர் புதன்கிழமைபிரதமரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து சோனியாவுக்கு பிரதமர்கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் ஊரக மற்றும் சமூக அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தும்எண்ணத்துடன்தான் விலை உயர்வு குறித்து அரசு முடிவு எடுத்துள்ளது. இந்தப்பிரச்சினையை தேவையில்லாமல் அரசியல் ஆக்குவதை கைவிட வேண்டும். இதன் மூலம்அரசின் இலக்கை எட்டும் முயற்சிகள் தடைப்படும்.
நீண்ட கால வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்த விலை வாசி உயர்வு அமல்செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். பணவீக்கம் வெகுவாககுறையும்.
சமீபகாலமாக அரசு எடுத்து வரும் முடிவுகள் அனைத்தும் ஊரக, சமுதாய வளர்ச்சியைக்கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டவை.
பொருளாதார வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளை அரசியலாக்குவது தேவையில்லாததுஎன்பதை தாங்கள் அறிவீர்கள். இதனால் முக்கிய தேசியப் பிரச்சினைகள் பின்னுக்குத்தள்ளப்படும்.
ஏழ்மை ஒழிப்பு மற்றும் வேலையில்லாமை ஆகியவற்றை ஒழிக்கும் அரசின் முயற்சிகளில்பொறுப்பான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும்.
அரிசி விலை உயர்வை, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு பார்க்க வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications