தமிழகத்தில் இன்று
டெல்லி:
மிகச்சிறிய குற்றங்களுக்காக ஜெயிலில் அடைக்கப்பட்ட பஞ்சாப் தீவிரவாதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்என்று உள்துறை அமைச்சர் அத்வானி அண்மையில் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். தற்போது பஞ்சாபில்தீவிரவாதிகள் ஆதிக்கம் குறைந்து வருவதுடன், மாநிலத்தில் எங்கும் மிகப்பெரிய அசம்பாவிதச் சம்பவங்கள்எதுவும் நடக்கவில்லை என்றார்.
முன்னாள் பஞ்சாப் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பணிபுரிந்த கே.பி.எஸ்.கில் பஞ்சாப்பில் தீவிரவாதத்தை ஒடுக்ககடும் முயற்சிகள் மேற்கொண்டார். இவர் அங்கு டிஜிபி யாகப் பணியாற்றிய 7 வருடங்களில் தீவிரவாதத்தைமுழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பஞ்சாப்பில் தீவிரவாதிகளே இல்லை என்று அளவுக்கு இவரதுநிர்வாகத்தின் போது குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்தது.
அவரிடம் மத்திய அரசின் திட்டம் குறித்து பேசினோம். பேட்டி விவரம்:
கே: பஞ்சாப்பில் சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் விடுவிக்கப்படுவார்களா?
ப: மிக மிக சிறிய குற்றத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்பட்டால் நல்லது. இந்த விடுவிப்பின் முக்கியநோக்கமே பஞ்சாப்பில் தீவிரவாதத்தை ஒடுக்குவது தான். அந்தந்த நேரத்திற்குத் தகுந்தது போல் தீவிரவாதிகள்விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள். இதற்கு முன் மத்திய அரசுடன் மாநில அரசு கலந்தாலோசித்தபின் இதற்கான இறுதி முடிவை எடுக்கும்.
கே: ஜம்முவில் ஹரியத் கமிட்டித் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டதுபோல் ஜெயிலில்அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் விடுதலை செயயப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் அத்வானிகூறியது குறித்து...?
ப: ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதத்திற்குப் பெயர் போன இடம். கைதிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து எந்தமாநிலத்தையும் ஜம்மு-காஷ்மீருடன் ஒப்பீடு செய்யக் கூடாது.
கே: பொதுவாய்ச் சொல்லப்போனால் முஸ்லீம் இனத்தவர்கள் பெரும்பாலும் தடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுகிறார்களே?
ப: அது முற்றிலும் தவறு. முஸ்லீம் கைதிகள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக பிற இனத்தவர்ஜெயிலிலேயே இல்லை என்று கூறிவிட முடியாது.
கே: அத்வானி கூறியதில் அரசியல் நோக்கம் ஏதாவது இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
ப: எல்லா அரசியல் கட்சிகளுமே அரசியல் ரீதியாக சிந்தித்துத்தான் முடிவுகள் எடுக்கின்றன.
கே: பஞ்சாப்பில் தீவிரவாதிகளை விடுதலை செய்வதன் மூலம் பாரதிய ஜனதாக் கட்சி சீக்கியர்களின் ஆதரவைப்பெற முயல்கிறது என்று கூறலாமா?
ப: நான் அப்படி நினைக்கவில்லை. யாருமே கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் பொதுமக்களின் ஆதரவைப் பெற முடியாது.
கே: மிகப்பெரிய குற்றங்களில் தொடர்புடைய தீவிரவாதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றுநினைக்கிறீர்களா?
ப: தேசிய ஒருமைபாட்டை நிலைநிறுத்துவதும், தேசியப் பாதுகாப்பைச் செம்மைப்படுத்துவதும் அரசின் கடமை.தீவிரவாதச் செயல்கள் ஏதும் புரியாமல் ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டால்சந்தோஷப்படுகிற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.
கே: ஜம்முவில் ஹிரியத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து உங்கள் கருத்து ..?
ப: உண்மையிலேயே அவர்கள் தவறு எதுவும் செய்யாமல் இருந்தால் அவர்களை விடுதலை செய்வதில்தவறேதுமில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications