தமிழகத்தில் இன்று
சென்னை:
2001 தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர்டாக்டர் கிருபாநிதி தெரிவித்தார்.
தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மாவட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாார்கிருபாநிதி. மாவட்டங்களில் கட்சி அமைப்புப் பணிகள் பற்றி அவர் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தமிழக கூட்டணி பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நிாட்டில் வருகிற 2001ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தொடரும். திமுக கூட்டணிவெற்றி பெற்றால, திமுக தான் ஆட்சி அமைக்கும்.
தேர்தலில் அதிக இடங்கள் கேட்பது பற்றி யோசித்து வருகிறோம்.
கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்போம். தமிழ்நாட்டில் திமுக தலைமையில் நல்லாட்சி நடைபெறுகிறது.மக்கள் பிரச்னைகளில் பாஜகவினர் ஈடுபாடு காட்ட வேண்டும்.
இலங்கை பிரச்சனையால் பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது. இந்தியத் தமிழர்களின் நலனை பாதுகாக்கும்வகையில் இலங்கை பிரச்னையில் வாஜ்பாய் முடிவெடுப்பார்.
தமிழக பாஜகவின் மாநில மாநாடு வேலூரில் அடுத்த மாதம் அல்லது ஜூலையில் நடத்தப்படும். இம்மாநாட்டில்பிரதமர் வாஜ்பாய் கலந்து கொள்கிறார்.
ஒரிசா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் வறட்சி நிவாரணத்திற்காக தமிழக பாஜக நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 22,23 மற்றும் 24ம் தேதிகளில் நிதி திரட்டப்படும் என்றார்.