கிரிக்கெட் சூதாட்டம்: பிந்த்ராவிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு
புது தில்லி:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் ஐ.எஸ்.பிந்தாராவிடம் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தன்னிடம்ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிய பிந்த்ரா, சில தினங்களுக்கு முன் சிபிஐ அலுவகத்துக்கு நேரில் வந்து வாக்குமூலம்அளித்தார். மேலும் சுமார் 360 பக்க அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
பிந்த்ராவின் அந்த அறிக்கையை சிபிஐ அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். அறிக்கை பரிசீலித்து முடித்த பிறகுபிந்த்ராவிடம் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த சில தினங்களிகில்பிந்த்ராவின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டுவிடும். அதற்குப் பிறகு இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம்பிந்த்ராவிடம் விசாரணை நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பிந்த்ராவும், சிபிஐயிடமிருந்து விசாரணைக்கு வரும்படி தகவல் வந்துள்ளதாகவும், அதற்கு எழுத்து மூலம் பதில்அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ தீவிரமாகவிசாரித்து வருகிறது. விசாரணையை முடிக்க காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், விரைவில்விசாரணையை முடித்து அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி சிபிஐ அதிகாரிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே, தன் மீது அவதூறான கருத்துக்களைக் கூறியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமுன்னாள் தலைவர் பி.எம். ருங்தா, தற்போதைய துணைத் தலைவர் கமால் மொரார்கா ஆகியோருக்கு பிந்த்ராகடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாரியத் தலைவராக இருந்தபோது சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக பிந்த்ரா மீது ருங்தாவும், மொரார்காவும்குற்றம் கூறியிருந்தனர். இதை பிந்த்ரா மறுத்துள்ளார். ருங்தாவும், மொரார்காவும் என் மீது கூறியுள்ளகுற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பொய்யானவை. அவர்களுடைய குற்றச்சாட்டுகள் குறித்து வாரியத்துடன் பேசிநடவடிக்கை எடுப்பேன் என்றார் பிந்த்ரா.
இந் நிலையில், கபில்தேவ் மீது பிந்த்ரா கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் எந்த நடவடிக்கையிலும்ஈடுபடக்கூடாது என்று மனோஜ் பிரபாகருக்கு கட்டுப்பாட்டு விதித்துள்ளதாக கூறப்படும் செய்திகளை சிபிஐமறுத்துள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம். பிந்த்ரா கூறிய குற்றச்சாட்டுகள்,தாங்கள் நடத்தி வரும் விசாரணை போன்றவை குறித்து யாரிடமும், எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.தகவல்களை வெளியிடக்கூடாது என்று யாரையும் கட்டுப்படுத்தவில்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications