தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் பாதுகாப்பு கமிட்டிகளை தயார் நிலையில் இருக்கும்படி அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் வட பகுதியில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வரும்இந் நேரத்தில் இத்தகைய அறிவிப்பை சந்திரிகா வெளியிட்டுள்ளார்.
கிழக்கு மட்டக்களப்பில் உள்ள புத்த கோயிலுக்கு அருகே புதன்கிழமை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இக் குண்டுவெடிப்பில் 20 பேர் இறந்தனர். 60 பேருக்கு மேல் காயமடைந்தனர். இச் சம்பவத்தால், அப் பகுதியில் இனக்கலவரம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்கும்படி மக்கள் பாதுகாப்புகமிட்டிகளை அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மனிதாபிமானமற்ற முறையில் மிகவும் மோசமான தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களின் நடவடிக்கையால் வட பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கு சிங்கள தீவிரவாதிகளால் எந்த பாதிப்பும்ஏற்படாத வகையில் அவர்களைக் காக்க அனைத்து தரப்பு மக்களும் முன் வரவேண்டும் என்றும் சந்திரிகாகூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்தி வருவதைஅடுத்து அங்கு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, நாட்டை போர்முனையில்நிறுத்தும் பொருட்டு கடந்த மாதம்தான் மக்கள் பாதுகாப்பு கமிட்டிகளை அரசு உருவாக்கியது.
இதற்கிடையே, கொழும்பு நகரில் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பை இலங்கைராணுவம் அதிகப்படுத்தியுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications