தமிழகத்தில் இன்று
சேலம்:
தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் 16 ம் தேதியுடன் காவிரி நீர் 63 டிஎம்சி அதிகமாகக் கிடைத்துள்ளதாக திருச்சி மண்டல காவிரிப் பாசன முதன்மை பொறியாளர்பி.பொன்னுசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுவை மாநிலங்களுக்கிடையே காவிரி நீர் பிரச்சனை இருந்து வருகிறது.
இது தொடர்பாக 1998ல் அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் அணையம் தனது இடைக்கால உத்தரவில் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 205 டிஎம்சி காவிரிநீர்திறந்துவிட வேண்டும் என்று கூறியிருந்தது.
இதுகுறித்துப் பொன்னுசாமி கூறுகையில், இந்த வருடம் மே 16 ம் தேதி வரை 268 டிஎம்சி தண்ணீர் கர்நாடகத்திலிருந்து கிடைத்துள்ளது. இது 63 சதவீதம்அதிகமாகும் என்றார்.
முன்னதாக பொன்னுசாமி மேட்டூர் அணையில் நீர் சேமித்து வைப்பது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் விவாதித்தார். அப்படி சேமித்து வைக்கப்பட்டநீரை ஜூன் 12 ம் தேதி முதல் காவிரிப் பாசன விவசாயிகளுக்காக திறந்து விடப்படுவது குறித்தும் அவர் விவாதித்தார்.
யு.என்.ஐ.