For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்யக்கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை:

இலங்கையில் நடக்கும் போரில் புலிகளிடம் தோல்வியடைந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக இலங்கைராணுவத்தினர் இந்தியாவிற்கு வந்தால் அவருக்கு இந்தியா ராணுவ உதவி எதுவும் செய்யக் கூடாது என்றுபாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், உள்துறை அமைச்சர் உள்பட பல்வேறு அமைச்சர்களுக்குக்கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் அமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இந்நிலையில்இலங்கை ராணுவ தளபதி ரோஹன டிசில்வா ரகசியப் பயணமாக இந்தியா வந்துள்ளார் என்று செய்திகள்வந்துள்ளன.

அவர் இந்தியாவிடம் ராணுவ உதவி கேட்கத்தான் இந்தியா வந்துள்ளார் என்றும் அச்செய்திகள்உறுதிப்படுத்துகின்றன. இலங்கை ராணுவத்தினர் எந்த ராணுவ உதவி கேட்டாலும் அதை இந்தியா செய்யக்கூடாது.யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்களை அழித்தே தீருவேன் என்று கூறி அதிபர் சந்திரிகாபோரை நிறுத்துவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்தியா முடிவு எடுத்துள்ளபடி இலங்கைக்கு எந்த ராணுவ உதவியும் செய்யக்கூடாது என்று பாமகநிறுவனர் ராமதாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X