For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்குள் நுழைந்த 5 பேர் வெடிவிபத்தில் சாவு

புனே:

ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த 5 பேர், வெடி குண்-டு வெடித்-துஉயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் அகமத் மாவட்டத்தில் ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. வியாழக்கிழமைமாலை இம் மையத்துக்குள் 5 பேர் அத்துமீறி நுழைந்தனர். மையத்துக்குள் கிடந்த உலோகப் பொருட்களைஅவர்கள் சேகரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, பயிற்சிக்குப் பிறகு ராணுவ வீரர்கள் விட்டுச் சென்ற டெடனேட்டர் போன்-ற வெடிபொருட்களைஅவர்கள் கையில் எடுத்துப் பார்த்தனர். அப்போது அப்பொருட்கள் வெடித்ததில் 5 பேரும் சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.

இறந்த அனைவரும் அகமத்நகர் மாவட்டம் பார்நெர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஆனால்,அவர்களுடைய பெயர் விவரம் தெரியவில்லை. இவர்களுடன் வந்த மற்றொருவர் வெடிவிபத்தில் சிக்கிபடுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X