மேற்-கிந்-தி-ய தீ-வு-க-ளி-டம் -தி-ண-று-கி-ற--து பாகி-ஸ்-தான்
கிங்ஸ்டன்:
பாகிஸ்தானுக்கு எதிராக கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிவலுவான நிலையில் உள்ளது. இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 283ரன்கள் எடுத்திருந்தது.
விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் என்ற நிலையில், வெள்ளிக்கிழமை தனது முதல் இன்னிங்ஸை மேற்கிந்தியத்தீவுகள் அணி தொடர்ந்தது. அணியின் எண்ணிக்கை 11-ஆக இருந்தபோது 4 ரன்கள் எடுத்தந நிலையில் கிரிஃபித்அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வேவல் ஹைன்ட்ஸ், மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கேம்ப்பெல்லுடன் ஜோடிசேர்ந்து விளையாடினர். இருவரும் நன்றாக ஆடி ரன்கள் குவித்தனர். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 133 ரன்கள்சேர்த்தனர். இந் நிலையில், 58 ரன்கள் எடுத்த நிலையில் கேம்ப்பெல் அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து வந்த சந்தர்பால், கேப்டன் ஆடம்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அடுத்துவந்த புதுமுகம் ஷர்வான், ஹைன்ட்ஸுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் ஷர்வான் பொறுமையாக விளையாடமற்றொரு முனையில் ஹைன்ட்ஸ் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார். அவர் 165 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்திருந்தது.ஷர்வான் 28 ரன்களுடனும், ஆம்புரோஸ் ரன் எடுக்காமலும் அவுட்டாகாமல் உள்ளனர்.
பாகிஸ்தான் அணியில் வக்கார் யூனிஸ், சக்லைன் முஷ்டாக் இருவரும் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
283 ரன்கள் எடுத்துள்ளதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தான் அணியை விட 30 ரன்கள் கூடுதலாகப்பெற்றுள்ளது. பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் எடுத்தது.












Click it and Unblock the Notifications