உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை
வான்கூவர்:
கனடா விமானப் படையில் சீக்கியர் ஒருவர் பணியில் சேர்ந்துள்ளார். கனடா விமானப் படையில் சீக்கியர் ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
24 வயதாகும் ஜகதீப் சிங் மசூன், இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார். கனடாவில் கணிசமான அளவில் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் சீக்கியஇனத்தவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.
பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் ஜகதீப் சிங்கின் குடும்பத்தினர். தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பர்னாபி என்றஇடத்தில் பணியாற்றி வருகிறார் ஜகதீப் சிங்.
1997-ம் ஆண்டு கனடாவின் ராயல் ஏர் போர்ஸில் அதிகாரியாக சேர்ந்தவர் ஜகதீப் சிங். வான்கூவரில் பிறந்த ஜகதீப் சிங்கின் தந்தை, சுக்தேவ் சிங் டர்டி,சங்கர்ஷ் என்ற பஞ்சாபி மொழி நாளிதழின் ஆசிரியர் ஆவார்.
ஜகதீப் சிங்கின் தந்தை 1974-ல் இந்தியாவிலிருந்து கனடாவுக்குக் குடி பெயர்ந்தார். விமான பைலட்டாக மட்டுமல்லாது, கம்ப்யூட்டரிலும் நிபுணர் ஜகதீப்சிங்.
ஐ,ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications