தமிழகத்தில் இன்று
-ம-து-ரை:
தீர்த்தத்தில் மயக்க மருந்து கொடுத்து 15 பவுன் நகை திருடிய பெண்ணைப் போலீசார் அடுத்த சில நிமிடங்களில் கைது செய்தனர்.
இது குறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பெரியதாய். இவரும் இவரது தோழியான ராஜபாளையம் தளவாய்புரத்தைச் சேர்ந்த பிச்சம்மாளும் சேர்ந்துமதுரையில் பாண்டி கோவிலுக்குச் சென்றனர்.
அவர்கள் சாமிகும்பிடப் போன சமயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்தக் கூட்ட நெரிசலில் தாங்கள் அணிந்திருந்த நகைகள் பறிபோய்விடுமோஎன்ற பயத்தில் இருவரும் தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி ஒரு துணிப்பையில் போட்டு தனியாக வைத்திருந்தனர்.
பின்னர் சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்குள் சென்றனர். இதை அவர்கள் அருகில் நின்றுகொண்டிருந்த பெண் பார்த்து விட்டாள்.
உடனடியாக அப்பெண் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களிடம் தீர்த்தம் என்று கூறி தண்ணீர் கொடுத்தாள்.
இதை பெரியதாயும், பிச்சம்மாளும் வாங்கிக் குடித்தனர். அடுத்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப்பெண் நைசாய் அவர்கள் நகைகள் வைத்திருந்த துணிப்பையை பறித்துக் கொண்டு தப்பித்து விட்டாள்.
இதையடுத்து கோயில் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அரை மயக்கத்தில் இருந்த நகைகளைப் பறிகொடுத்த பிச்சம்மாளும், பெரியதாயும் தங்களுக்குதீர்த்தம் கொடுத்து ஒரு பெண் தங்களது பையைப் பறித்துக் கொண்டதாகக் கூறினார்கள்.
பின்னர் கருப்பாயூரணி போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிரமாய்த் தேடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நகை திருடிய நாகம்மாளைக் கைது செய்து நகைகளைப்பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications