கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து

Subscribe to Oneindia Tamil
கிளின்டன் வந்தார்...வியாபாரம் போச்சு: நஷ்டஈடு வழங்க வியா-பா-ரி-கள் கோரிக்கை

டெல்லி:

அமெரிக்க அதிபர் பில்கிளின்டனின் இந்திய வருகையின் போது டெல்லி சாலையோரப் பகுதிகளில் கடைகள் நடத்தி வந்த பாதிக்கப்பட்ட வியாபாரிகள்தங்களுக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி தேசிய மனித உரிமைக் கமிஷனை அணுகியுள்ளனர்.

டெல்லி சாலையோர வியாரிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக " ரெக்ரி - பத்ரி கோம்சா யூனியன் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் கிளின்டன் வருகையின்போது பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் பலர் ரெக்ரி பத்ரி கோம்சா யூனியன் மூலம் தேசிய மனித உரிமைக்கமிஷனை அணுகினார்கள்.

டெல்லியில் அஜ்மீர் கேட் பகுதியில் சுமார் 50 வியாபாரிகளின் கடைகள் போலீசாரால் நீக்கப்பட்டன. மார்ச் மாத இறுதியில் அப்பகுதியிலிருந்துநீக்கப்பட்ட அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

ஒவ்வொரு வியாபாரிக்கும் ரூ 4500 என்ற கணக்கில் சுமார் 50 வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இதற்கு தகுந்த நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று கூறி அவர்கள் தேசிய மனித உரிமைக் கமிஷனை அணுகியுள்ளனர்.

தேசிய மனித உரிமைக் கமிஷன் இந்தப் பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. அந்த சிறு வியாபாரிகளின் சார்பில் வக்கீல்அசோக் அகர்வால் ஏழை வியாபாரிகளுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லியில் கமலா மார்க்கெட் போலீஸ்நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக அங்கே இந்த வியாபாரிகள்வியாபாரம் நடத்தி வருகிறார்கள். அவர்களது கடைகளை நீக்குவதற்கு மத்தியஅரசு உதவி புரிய வேண்டும்.

கிளின்டன் அமெரிக்கா திரும்பியும் மீண்டும் ஒரு வருடத்திற்கு அவர்கள் அந்தப் பகுதியில் வியாபாரம் நடத்துவதற்கு விடப்படவில்லை.

இதை விசாரித்த தேசிய மனித உரிமைக் கழகம் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நஷ்டஈடு வழங்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+