தமிழகத்தில் இன்று
புதுக்கோட்டை:
யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த நான்கு இலங்கைத் தமிழ் அகதிகள் புதுக்கோட்டை அருகே மீமசல் என்ற இடத்தில் மீட்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இவர்கள் மீமசல் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இவர்களைப் பார்த்த பொதுமக்கள், நான்கு பேரையும் போலீஸாரிடம்ஒப்படைத்தனர்.
கோவிந்தன், ருத்ரேஸ்வரன், டேவிட் டக்ளஸ், ஜெகன்னாதன் ஆகிய இந்த நால்வரும் யாழ்ப்பாணத்திலுள்ள நெடுந்தீவு என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள்.மீமசல் வந்து சேர்ந்த இவர்கள் அங்கிருந்த மீனவர்களிடம் அடைக்கலம் கேட்டனர்.இருப்பினும், மீனவர்கள் அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
நான்கு பேரிடமும் புதுக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்றுஅவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது, இவர்களில் இரண்டு பேர் தெக்கத்தூர் அகதிகள் முகாமில் இருந்தவர்கள். சமீபத்தில்தான் இலங்கைக்குத் திரும்பிச் சென்றனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.