தமிழகத்தில் இன்று
சென்-னை:
ஜூன் 3ம் தேதி முதல்வர் கருணா-நிதியின் 77வது பிறந்த -நாள். இதையொட்டி வாழ்த்து -த-ரிவிக்க கட்சியினர் யாரும் சென்னை வர வேண்டாம் என்றுகருணாநதி கேட்டுக் கொண்டுள்ளார்.
வழக்கமாக முதல்வர் கருணா-நிதியின் பிறந்த -நாள் விழா சென்னையில் சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. காலை -முதல் இரவு வரை பல்வேறு-நிகழ்ச்சிகள் கட்சி சார்பில் நடைபெறும். -முக்கிய அம்சமாக அண்ணா அறிவாலயத்தில் -முதல்வர் கருணா-நிதிக்கு கட்சியினர் வாழ்த்து சொல்லும் -நிகழ்ச்சி.
மாநிலம் -முழுவதிலும் இருந்து திரண்டு வந்திருந்த கட்சியினர் வ-ரிசையாக -நின்று -முதல்வருக்கு மாலை, பொன்னாடை அணிவித்து வாழ்த்துதெ-ரிவிப்பார்கள். இந்-நிகழ்ச்சியில் கட்சியின-ரிடம் இருந்து -நிதி வசூலிப்பதற்காக "பெ-ரிய உண்டியல் வைக்கப்படும். அதன் -மூலம் லட்சக் கணக்கானபணம் வசூலாகும். மாலை வரை -நடைபெறும் இந்-நிகழ்ச்சிக்கு -பின்னர் இரவில் -நடைபெறும் பிறந்த -நாள் பொதுக் கூட்டத்துடன் -முதல்வ-ரின் பிறந்த-நாள் கொண்டாட்டம் -முடிவடையும்.
ஆனால், இந்த முறை அதுபோன்ற பிறந்த -நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கருணா-நிதி -முடிவு செய்துள்ளார். கட்சியினர் யாரும் வரவேண்டாம்என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காட்டாற்று வெள்ளப் பெருக்கில் எதிர் நீச்சல் போட்டு காடு, மலை, வன வனாந்திரங்களில் கால் தேயப் பணித்து பாறாங்கற்களைப் பாதையில்உருட்டும் சூறாவளிகள், பூகம்பங்கள், பாலைவனத்தில் பார்வையை மறைக்கும் பெருங்காற்று இவற்றிற்கு ஈடு கொடுத்து விஷந்தோய்ந்த விமர்சனக்கணைகளை விலாப்புறத்தில் வினாடிக்கு வினாடி துளைத்தெடுப்பதையும் தாங்கிக் கொண்டு வியர்வைக்கும், உழைப்புக்கும், மரியாதை கொடுத்து வலுவற்றஉடலில் வலுவான கொள்கைளை மட்டும் உரமாகக் கொண்டு வளர்ந்த ஒருவன், 77 வயது வரை வாழ்ந்து விட்டேன் என்பது எனக்கே வியப்பூட்டும்செய்தி தான்.
எனக்கு 77 வயது என்றதும், இதனை எவ்வண்ணம் கொண்டாடலாம், விழாவுக்கு எப்படி அழகு சேர்க்கலாம், எத்தனை வாகனங்களில் சென்னைக்குபுறப்படலாம் என்றெல்லாம் கட்சியினர் திட்டம் தீட்டுகிற தகவல் எனக்கு தெரியும். என் வேண்டுகோளைப் புறக்கணிக்காமல், கட்சியினர் வீணேஅலையாமல் சென்னைக்கு வருவதைத் தவிர்த்து, ஆங்காங்கு என் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பிறந்த நாள் தி-முக கொள்கைகளுக்கு விளக்க -நாளாக அமைய வேண்டும். ஆட்சியின் சாதனைகளை வி-ரித்துரைக்கும் -நாளாக இருக்க வேண்டும்.1988 -முதல் தொடர்ந்து செயல்படுத்துவது போல் மரக் கன்றுகள் -நடப்பட வேண்டும். ஆயிரம் ஏழைகளுக்கு இலவச உணவு அளியுங்கள்.ஆயிரக்கணக்கில் வாகனங்களுக்கு செலவிட்டு சென்னைக்கு வருவதை தவிர்த்து ச-மூக நிலப் பிரச்னைகளில் முழுக் கவனத்தையும் கட்சியினர் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.