தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பெங்ளூர் வந்த இலங்கை அமைச்சர் சென்னை சென்றார்
பெங்களூர்:
பெங்களூர் வந்திருந்த இலங்கை வெளியுறவு இணை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா, திங்கள்கிழமை நள்ளிரவு சென்னை புறப்பட்டுச் சென்றார்.
மூன்று நாட்களுக்கு முன்பு அவர் பெங்களூர் வந்தார். தற்போது யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே போர் தீவிரமாகநடந்து வரும் நிலையில், இலங்கை அமைச்சர் இந்தியா வந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இவருக்கு முன்பு இலங்கை ராணுவத் தளபதி ரோஹன டிசில்வாசென்னை வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில், பெங்களூரிலிருந்து திங்கள்கிழமை நள்ளிரவு கிரியல்லா சென்னை புறப்பட்டுச் சென்றார். பெங்களூர் வந்த கிரியல்லா, ஒயிட்பீல்டிலுள்ளசத்ய சாய்பாபா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications