For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
சீனாவில் ஏழு நாள் சுற்றுப்பயணம் செய்கிறார் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன்

டெல்லி:

ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் , மே 28-ம் தேதி முதல் ஏழு நாட்களுக்கு சீனாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அந்நாட்டு அதிபர் ஜியாங் செமின்அழைப்பின் பேரில் அவர் சீனா செல்கிறார்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் இந்தியஜனாதிபதி சீனா செல்வதுமுக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதிபர் ஜியாங் செமின் மற்றும் பிற சீனத் தலைவர்களுடன் கே.ஆர்.நாராயணன் பேச்சு நடத்துவார். இரண்டு நாட்கள் அவர் தலைநகர் பீஜிங்கில் தங்கியிருப்பார்.பீகிங் பல்கலைக்கழகத்தில் வைப்பதற்காக வங்கக் கவிஞர் ரவீந்திர நாத் தாகூரின் மார்பளவுச் சிலையை பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் வழங்குவார். அதன் பிறகு கல்வியாளர்ள், மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துகிறார்.

பீஜிங் தவிர, தலியான், கூமிங் ஆகிய நகரங்களுக்கும் நாராயணன் செல்கிறார். ஜூன் 3-ம் தேதி இந்தியா திரும்புகிறார்.

ஜனாதிபதியுடன், மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, எம்.பிக்கள் சோம்நாத் சாட்டர்ஜி, ராமச்சந்தின் பிள்ளை, சுஷில் குமார் ஷிண்டே, சுஷ்மாசுவராஜ் ஆகியோரும் செல்கின்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X