மேட்ச் பிக்ஸிங் தொடர்-பா-ன உண்-மையை மக்களிடம் சொல்வேன் - பிரபாகர்
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான உண்மைகளை மக்களிடம் விரைவில் தெரிவிப்பேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர்கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், தனக்கும் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாகவும் மனோஜ் பிரபாகர்குற்றம் சாட்டினார். ஆனால், அந்த வீரர்களின் பெயர்களை அவர் இதுவரை வெளியிடவில்லை.
இதற்கிடையே, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான புகார்களை விசாரிக்கும்படி சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந் நிலையில், மனோஜ்பிரபாகருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தது கபில்தேவ் தான் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ராகுற்றம் சாட்டினார். ஆனால், அக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக தன்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில, சமீபத்தில் கூடிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிந்த்ராவுக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.
சிபிஐ தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தனது மவுனத்தைக் கலைக்க மனோஜ் பிரபாகர் தயாராகி வருகிறார். தான் கூறியகுற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை மக்களிடம் தெரிவிக்கவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மக்களிடம் தகவல்களைத் தெரிவிக்க முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஒருவாரத்தில் அனைத்து தகவல்களையும் வெளியிடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
நான் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கிரிக்கடெ கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறினர்.ஆனால், அத்தகைய மிரட்டலுக்கும் நிர்பந்தத்துக்கும் நான் அடிபணியமாட்டேன்.
விரைவில் அனைத்து உண்மைகளையும் மக்களிடம் தெரிவிப்பேன். எதற்காக நான் மன்னிப்பு கேட்கவேண்டும். வாரியத்துக்கு எதிரான எந்தநடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை. வாரிய உறுப்பினர்களுக்கு எதிரான எந்த கருத்துக்களையும் நான் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும்போது,என்னை அவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரியது சரியான செயல் அல்ல என்றார் மனோஜ் பிரபாகர்.
இதற்கிடையே, தான் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை உடனே தெரிவிக்கவில்லை என்று மனோஜ் பிரபாகர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications