For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள்: அமெரிக்கஎம்.பி. புலம்பல்

வாஷிங்டன்:

இந்தியாவில் இன்னும் கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று இந்தியாவுக்கு எதிரான கருத்துடைய எம்.பி. ஜான் டூலிட்டில்கூறியுள்ளார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டூலிட்டில், கூறுகையில், கிறிஸ்தவர்களையும், பிற சிறுபான்மைச் சமூகத்தினரையும் எந்தந்த வழிகளிலெல்லாம் பொய்வழக்குகளில் சிக்க வைக்கலாம் என்பது குறித்து ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) திட்டமிட்டு வருவதாக பத்திரிகைகளில் செய்திகள்வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக இந்துக்களைக் காப்போம் என்றபெயரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. சிறுபான்மைப் பிரிவினருக்குகுறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக என்ன மாதிரியான பொய் வழக்குகளைப் போடலாம் என்பது குறித்து இந்தப் புத்தகத்தில் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களாக இந்தப் புத்தகம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மதச்சகிப்பின்மைய இந்தியா கற்றுக்கொள்ளாவிட்டால், உலகின் பிற நாடுகளின்ஆதரவு அதற்குக் கிடைக்காது என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X