For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசியக் கோப்பையை வெல்வோம் - கங்குலி

By Staff
Google Oneindia Tamil News

கல்கத்தா:

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாகோப்பையை வெல்லும் என்று அணி கேப்டன் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.

புனேயில் நடைபெற்ற அணி தேர்வு கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்ட செவ்வாய்க்கிழமை இரவு கல்கத்தாதிரும்பிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

டாக்காவில் இம்மாதம் 28-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறஉள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன.

ஆசியக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அனைத்து வீரர்களும் தங்களது முழுதிறமையைக் காட்டி விளையாடுவோம். நிச்சயம் நாங்கள் கோப்பையுடன் தாய் நாடு திரும்புவோம்.

ஆசியக் கோப்பைக்காக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணிக்கான வீரர்கள் அனைவரும் முழுதிறமையுடனும் தகுதியுடனும் உள்ளனர். அத்தகைய வீரர்கள் தான் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆகவே, கோப்பையை வெல்வது கடினமானதாக இருக்காது என்று கருதுகிறேன்.

இந்திய அணியில் குறிப்பிட்ட அளவுக்கு பந்து வீச்சாளர்கள் இல்லை என்பது உண்மைதான். இருப்பினும்,இருக்கும் பந்து வீச்சாளர்களை வைத்து திறமையாகச் செயல்படுவோம். தற்போதைக்கு இந்த அணிதான் சிறந்தஅணி.

டாக்காவில் உள்ள பிட்சி, பேட்டிங்குக்குச் சிறந்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை, சிறந்த பேட்ஸ்மேன்கள்உள்ளனர். நிச்சயமாக பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை விட பேட்டிங்கில் இந்திய அணி வலுவாகஉள்ளது.

சச்சின் டெண்டுல்கர் ரன் எடுக்கத் தவறிவிட்டால் மற்ற வீரர்களும் ரன் குவிக்கத் தவறிவிடுகின்றனர் என்பதைஒப்புக் கொள்ளமாட்டேன். ஏனெனில் இந்திய அணியில் ராகுல் திராவிட், அஜய் ஜடேஜா, அசாருதீன் ஆகியசிறந்த வீரர்கள் உள்ளனர். டாக்காவில் நமது அணியின் பேட்டிங் திறமை நன்கு பளிச்சிடும். கோப்பை நமக்குக்கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார் கங்குலி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X