கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் முக்கிய திருப்பம்: சிபிஐயிடம் நேரில் ஆஜரானார் மனோஜ் பிரபாகர்
டெல்லி:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீதான கிரிக்கெட் சூதாட்டம்குறித்து விசாரித்து வரும் சிபிஐ அலுவலகத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் புதன்கிழமை நேரில்ஆஜரானார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் சில கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டதாகவும், தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்ததாகவும் 3ஆண்டுகளுக்கு முன் மனோஜ் பிரபாகர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்என்றும் அவர் கோரினார்.
குற்றச்சாட்டுகளைக் கூறிய அவர், சம்பந்தப்பட்ட வீரர்களின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார். அவரதுகுற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சந்திரசூட்டிடமும் அவர் வீரர்களின் பெயரைத்தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, மனோஜ் பிரபாகருக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது கபில்தேவ் என்று இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா கூறினார். இப்படி குற்றச்சாட்டுகள் அதிகரித்ததைஅடுத்து இது குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
சில நாட்களுக்குப் பிறகு சிபிஐ அலுவலகத்துக்கு நேரில் வந்த பிந்த்ரா, சுமார் 360 பக்க அறிக்கையைச்சமர்ப்பித்தார். கபில்தேவ் மீது தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று அவர் தெரிவித்தார்.
இந் நிலையில், கபில் தேவ் மீதும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறிய பிந்த்ராவுக்குநோட்டீஸ் அனுப்புவது என்று கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு நோட்டீஸும்அனுப்பப்பட்டது.
நோட்டீஸுக்கு பிந்த்ரா அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்று வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா தெரிவித்தார். மேலும், தான் கூறிய குற்றச்சாட்டுகள்குறித்து உண்மைகளை விரைவில் தெரிவிக்கவில்லை என்றால் மனோஜ் பிரபாகர் மீதும் வழக்குத் தொடரப்படும்என்று அவர் தெரிவித்தார்.
இந் நிலையில், தான் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து மவுனமாக இருந்த மனோஜ் பிரபாகர், இந்த வாரத்துக்குள்உண்மையைச் சொல்வேன் என்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். ஆனால், திடீரென்று சிபிஐ அலுவலகத்துக்குபுதன்கிழமை அவர் நேரில் ஆஜரானார்.
புதன்கிழமை பிற்பகல் சிபிஐ அலுவலகம் வந்த பிரபாகர், தான் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பானஆவணங்களைச் சமர்ப்பித்தார். ஆனால், அதன் முழு விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், கிரிக்கெட்சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் பெயரை அவர் சிபிஐயிடம் தெரிவித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிபிஐயிடம் பிரபாகரே நேரில் ஆஜராகி, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான தகவல்களைத் தெரிவித்துள்ளதைஅடுத்து, சிபிஐ விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஏனெனில், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி முதலில்குற்றச்சாட்டுகளைக் கூறியது பிரபாகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications