தமிழகத்தில் இன்று
டெல்லி:
ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள முதலீட்டைத்திரும்பப் பெறுவது தொடர்பான அமைச்சரவை கமிட்டிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷரத் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:
ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும்,வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு செய்யப்படும்.
முதலில் தேசிய நலனையும் அடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு முடிவுஎடுக்கப்படும். சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும், முதலீட்டைத் திரும்பப் பெறும் துறைக்கும் இடையேஎந்தப் பிரச்சினையும் இல்லை.
புதிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றார் ஷரத் யாதவ்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications