கிரிக்கெட் சூதாட்டம்: பிரபாகர் குறிப்பிட்ட அனைத்து வீரர்களும் விசாரிக்கப்படுவர் - சிபிஐ
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான விவகாரத்தில் மனோஜ் பிரபாகர் குறிப்பிட்ட அனைத்து வீரர்களிடமும்விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
1994-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் தனக்கு ரூ. 25 லட்சம்லஞ்சம் கொடுக்க கபில் தேவ் முயன்றதாக முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 3ஆண்டுகளுக்கு முன் கபில் தேவின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்த பிரபாகர், புதன்கிழமை பகிரங்கமாக கபிலின்பெயரை அறிவித்தார்.
எனக்கு கபில் தேவ் லஞ்சம் கொடுக்க முயன்ற செய்தியை அஜித் வடேகர், அசாருதீன், கவாஸ்கர், ரவி சாஸ்திரி,சித்து, பிரசாந்த் வைத்யா, மோங்கியா ஆகியோருக்குத் தெரியும் என்று பிரபாகர் தெரிவித்தார்.
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து தற்போது விசாரித்து வரும் சிபிஐ, பிரபாகர் குறிப்பிட்ட மேற்கண்ட நபர்களிடம்விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. கபிலிடமும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ விசாரணைக்குழுத் தலைவர் ஆர்.என். சவானி தெரிவித்தார்.
ஏற்கெனவே சித்து மற்றும் அஜித் வடேகரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. இருப்பினும், பிரபாகரின் தகவல்புதன்கிழமை வெளியானதை அடுத்து அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
கபில் தேன் தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது குறித்து என்னிடம் பிரபாகர் கூறியது உண்மைதான் என்றும்,அதற்கு உடனே கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி பிரபாகரிடம் கூறினேன் என்றும் ரவி சாஸ்திரிகூறியுள்ளார்.
ஆனால், பிரபாகருக்கு கபில் தேவ் லஞ்சம் கொடுக்க முன் வந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது பெயரைபிரபாகர் எவ்வாறு குறிப்பிட்டார் என்றும் தெரியாது என்று வைத்யா கூறியுள்ளார்.
இதற்கிடையே, தன் மீது பிரபாகர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து எதையும் மிகைப்படுத்தவேண்டும் என்றுபத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சிபிஐவிசாரணை முடியும் வரை மவுனம் காக்கும்படி அவர் கூறியுள்ளார்.
என்னைப் பொருத்துவரை நான் குற்றம் செய்யவில்லை. ஒரு திட்டமிட்ட சதியில் நான் சிக்கியுள்ளேன். சிபிஐவிசாரணையில் உண்மை வெளிவரும். தேச நலனில் அக்கறையுள்ள நான் ஒருபோதும் அத்தகைய நடவடிக்கையில்ஈடுபடமாட்டேன் என்றார் கபில் தேவ்.
இந் நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி இனிமேல் யாரும் எதையும் கூறவேண்டும். அது பற்றி விசாரணைநடத்தி வரும் சிபிஐக்குத் தான் எந்த வித தகவலையும் தெரிவிக்க அதிகாரம் உள்ளது என்று இந்திய அணியின்முன்னாள் பயிறசியாளர் அஜித் வடேகர் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications