கிரிக்கெட் சூதாட்டம்: பிரபாகர் குறிப்பிட்ட அனைத்து வீரர்களும் விசாரிக்கப்படுவர் - சிபிஐ
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான விவகாரத்தில் மனோஜ் பிரபாகர் குறிப்பிட்ட அனைத்து வீரர்களிடமும்விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
1994-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் தனக்கு ரூ. 25 லட்சம்லஞ்சம் கொடுக்க கபில் தேவ் முயன்றதாக முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 3ஆண்டுகளுக்கு முன் கபில் தேவின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்த பிரபாகர், புதன்கிழமை பகிரங்கமாக கபிலின்பெயரை அறிவித்தார்.
எனக்கு கபில் தேவ் லஞ்சம் கொடுக்க முயன்ற செய்தியை அஜித் வடேகர், அசாருதீன், கவாஸ்கர், ரவி சாஸ்திரி,சித்து, பிரசாந்த் வைத்யா, மோங்கியா ஆகியோருக்குத் தெரியும் என்று பிரபாகர் தெரிவித்தார்.
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து தற்போது விசாரித்து வரும் சிபிஐ, பிரபாகர் குறிப்பிட்ட மேற்கண்ட நபர்களிடம்விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. கபிலிடமும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ விசாரணைக்குழுத் தலைவர் ஆர்.என். சவானி தெரிவித்தார்.
ஏற்கெனவே சித்து மற்றும் அஜித் வடேகரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. இருப்பினும், பிரபாகரின் தகவல்புதன்கிழமை வெளியானதை அடுத்து அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
கபில் தேன் தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது குறித்து என்னிடம் பிரபாகர் கூறியது உண்மைதான் என்றும்,அதற்கு உடனே கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி பிரபாகரிடம் கூறினேன் என்றும் ரவி சாஸ்திரிகூறியுள்ளார்.
ஆனால், பிரபாகருக்கு கபில் தேவ் லஞ்சம் கொடுக்க முன் வந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது பெயரைபிரபாகர் எவ்வாறு குறிப்பிட்டார் என்றும் தெரியாது என்று வைத்யா கூறியுள்ளார்.
இதற்கிடையே, தன் மீது பிரபாகர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து எதையும் மிகைப்படுத்தவேண்டும் என்றுபத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சிபிஐவிசாரணை முடியும் வரை மவுனம் காக்கும்படி அவர் கூறியுள்ளார்.
என்னைப் பொருத்துவரை நான் குற்றம் செய்யவில்லை. ஒரு திட்டமிட்ட சதியில் நான் சிக்கியுள்ளேன். சிபிஐவிசாரணையில் உண்மை வெளிவரும். தேச நலனில் அக்கறையுள்ள நான் ஒருபோதும் அத்தகைய நடவடிக்கையில்ஈடுபடமாட்டேன் என்றார் கபில் தேவ்.
இந் நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி இனிமேல் யாரும் எதையும் கூறவேண்டும். அது பற்றி விசாரணைநடத்தி வரும் சிபிஐக்குத் தான் எந்த வித தகவலையும் தெரிவிக்க அதிகாரம் உள்ளது என்று இந்திய அணியின்முன்னாள் பயிறசியாளர் அஜித் வடேகர் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications