முகத்தில் தெளித்த சாரல்...
Subscribe to Oneindia Tamil
பிலிப்பைன்சில் விமானம் கடத்தல்
மணிலா:
தாவோ நகரிலிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டுத் தலைநகர் மணிலாவுக்கு வந்து கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் விமானம் வியாழக்கிழமை கடத்தப்பட்டது.
மணிலா ரேடியோ செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மணிலா விமான நிலையத்தில் இறங்கும்போது எடுக்கப்பட வேண்டியநடவடிக்கைக்காக பாதுகாப்புப் படையினர் அதிக அளவு விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர் என்று ரேடியோ செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
விமானக் கடத்தல் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. கடத்தப்பட்ட விமானம் மணிலா விமான நிலையத்தில்,உள்நாட்டு நேரப்படி மாலை 3.30 மணிக்கு தரையிறங்கியிருக்க வேண்டும். ஆனால் 4 மணி வரை தரையிறங்கவில்லை.
விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications