தமிழகத்தில் இன்று
நெல்லை:
தமிழக வருவாய்த்துறை முழுவதும் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில்மனோகரன் கூறினாார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.தனவேல் தலைமையில் பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், வருவாய்த்துறையின் பணிகள்முழுவதையும் கம்ப்யூட்டர்மயமாக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன் முதல்கட்டமாக நெல்லை மாவட்டத்திலுள்ள50 வட்டங்களுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை பாளையங்கோட்டை மற்றும் தென்காசி தாலுகா அலுவலகங்கள்இத்திட்டத்தில் பயன் பெற்று பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் அனைத்து வட்டாட்சியர்அலுவலங்களையும் முழுமையாக கம்ப்யூட்டர்மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஒளிவுமறைவற்ற சிறந்த நிர்வாகத்தை செயல்படுத்துவது என்ற தமிழக அரசின் குறிக்கோளை அடைவதற்கு இந்தக்கம்ப்யூட்டர்மயமாக்கல் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications