முகத்தில் தெளித்த சாரல்...
வி-சு-வா-ச-மாய் -இ-ருந்-தால் மீண்-டும் பத-வி: தின-க-ரன் சொல்-கி-றார்
கோவை:
அ.தி.மு.க. மற்றும் அதன் சார்புடைய அமைப்புகளில் பதவி இழந்தவர்கள் தொடர்ந்து விசுவாசத்தோடு பணியாற்றி வந்தால்மீண்டும் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது என கோவையில் நேற்று ஜெயலலிதா பேரவை பொதுச் செயலர் தினகரன் கூ-றி-னார்.
கோவையில் நடந்த ஜெயலலிதா பேரவை செயல்வீரர்கள் கூட்டத்தில் ஜெ.பேரவைப் பொதுச் செயலர் டி.டி.வி.,தினகரன் எம்.பிகலந்து கொண்டார். இன்று அவர் நிருபர்களிடம் கூ-றுகை-யில்,
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை நம்பியவர்கள் யாரும் வீண் போனதில்லை. மோசம் போனதில்லை. பதவியைஇழந்-தும் தொடர்ந்து அ.தி.-மு.க.,மற்றும் அதன் சார்பு இயக்கங்களில் பணியாற்றி வருபவர்கள் விசுவாசமாக செயல்பட்டால்மீண்டும் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டு நிர்வாகிகள் ச-ரியான -முறையில் செயல்படவில்லை என்றால் -பதவியிலிருந்து விலக்கப்படுவர்.தமிழ்-நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் உள்ளது என பத்தி-ரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விடுதலைப் புலிகள் ஊடுருவல் நடந்ததால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இதே
போன்று ஊடுருவல் நடந்தால் விளைவுகள் மோசமானதாகவே இருக்கும்.
-நான் படிக்கும்போது கல்லூ-ரி விடுதியில் கட்டணம் கட்டாததால் கல்லூரியை விட்டு வெளியேற்றி விட்டதாக கே.பி ராமலிங்கம்குற்றம் சாட்டி வருகிறார். இவர்
வேண்டுமென்றே திட்டமிட்டு இத்தகைய வதந்தியை பரப்பி வருகிறார்.
இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.