For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
வெளிநாடுகளில் கிளைகள் திறக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

மும்பை:

இந்திய வங்கித் துறையில் சிறப்பிடம் பெற்றுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முதல்முறையாக வெளிநாடுகளில் கிளைகள்திறக்கிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களைக் கவனத்தில் கொண்டு வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நியுயார்க்,துபாய், லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நகரங்களில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளைகள் திறக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று வங்கியின் தொழில்பிரிவுத் தலைவர் பி.ஹெச். ரவிகுமார் தெரிவித்தார்.

தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு 25 ஆயிரம் வெளிநாட்டு இந்தியர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். உலகம்முழுவதும் சுமார் 2.2 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களையும் தனது வாடிக்கையாளர்களாக்கிக்கொள்ளும் வகையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி திட்டமிட்டுள்ளது. அதற்காகவே, உலகம் முழுவதும் கிளைகள் துவக்கதிட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தற்போது 5 நகரங்களில் கிளைகள் திறக்கப்படும். அவை, முழு கிளையாகச் செயல்படுமா அல்லதுபிரதிநிதி அலுவலகமாகச் செயல்படுமா என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

1999-2000-ம் ஆண்டில் ரூ. 105.30 கோடி லாபம் பெற்றதன் மூலம் 66 சதவீத வளர்ச்சியை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2000, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சுமார் ரூ.9,866.02கோடியை பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X