தமிழகத்தில் இன்று
புலிகளின் கெடு இன்று மா-லை--யில் முடிகிறது
யாழ்ப்பாணம்:
இலங்கையில் ராணுவத்தினர் சரணடைந்துவிட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் விடுத்-துள்-ள --கெ-டு வெள்-ளிக்-கி-ழ-மை இன்றுடன் முடிகிறது.
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. போர் உச்ச கட்டத்தை அடைந்துள்ள இந்த நிலையில் புலிகள்,ராணுவத்தினர் சரணடைவதற்கு ஒரு வார காலம் கெடு விதித்திருந்தனர்.
இந்தக் கெடு இன்றுடன் முடிகிறது. விடுதலைப்புலிகளின் ரேடியோ அறிவிப்பில் இன்று இரவுக்குள் ராணுவத்தினர் அனைவரும் எங்களிடம் சரணடைந்து விடவேண்டும். எங்களிடம் சரணடைந்து விட்ட பிறகு சிப்பாய்கள் அனைவரையும் நாங்கள் பத்திரமாக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்து விடுவோம்என்றும் கூறியுள்ளது.
ஆனால் ராணுவத் தளபதி பெரேரா நாங்கள் சரணடைய மாட்டோம். தொடர்ந்து புலிகளுடன் போர் புரிவோம் என்று கூறியுள்ளார்.
சந்திரிகா அதிர்ச்சி:
இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் முறையிலும், நாட்டில் ஜனநாயக முறையை அமுல்படுத்தக் கோரியும் எதிர்க்கட்சிகளுடன் நடக்கஇருந்த பேச்சுவார்த்தையில் அதிபர் சந்திரிகா கலந்து கொள்ளவில்லை.
அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் ராணுவத்தினர் சரணடையாவிட்டால் உயிர்ச்சேதம் பயங்கரமாக இருக்கும் என்று விடுத்துள்ள எச்சரிக்கையால் அதிபர் சந்திரிகாஅதிர்ச்சியடைந்துள்ளார்.
தாய்லாந்தில் ஆயுதங்கள்:
புலிகள் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை தாய்லாந்திலிருந்து கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றன. புலிகள் முதலில் மியான்மரில் இருந்து ஆயுதங்களைப்பெற்றுக் கொண்டு வந்தன. இப்போது அவர்கள் தாய்லாந்திலிருந்து ஆயுதங்களைப் பெற்று வருகின்றன.
தாய்லாந்து உளவுப்படையினர் விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது.