தமிழகத்தில் இன்று
ஜெய-ல-லி-தா-வுக்-கு யோச-னை சொல்-கி-றார் லத்--தீப்
சென்னை:
தனித்து ஆட்சி அமைப்போம் என்பதை இப்போதே கூறக் கூடாது; தேர்தலுக்கு பிறகு தான் அதை தீர்மானிக்க வேண்டும் என்று அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு இந்திய தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப் யோசனை தெ-ரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை லத்தீப் அளித்த பேட்டி:
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக பேசி வருகின்றன. ரேஷன் அ-ரிசிக்கான மானியத்தை மத்திய அரசுகுறைத்ததை எதிர்த்து தேசிய ஜன-நாயகக் கூட்டணியில் உள்ள அரசுகள் பேசுகின்றன.
ஆனால், இந்த முடிவு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பாமக, மதி-முக, --தி-முக போன்றகட்சிகள் அப்போதே எதிர்க்காமல் வெளியில் வந்து எதிர்ப்பது -முரணாக உள்ளது.
இலங்கை பிரச்னையில் மத்திய அரசு என்ன முடிவு எடுத்தாலும் அதை தேசிய லீக் ஏற்றுக் கொள்ளும். காயிதே மில்லத் காலத்தில் இருந்து வெளி-நாட்டுவிவகாரங்களில் மத்திய அரசின் -நிலையை ஆத-ரிப்பதே எங்களது வழக்கம்.
தமிழகத்தில் மதி-முக, பாமக போன்ற கட்சிகள் மத்திய அரசின் -நிலைக்கு -முற்றிலும் -முரணாக பேசுவது ஆபத்தானது. இதுமாதி-ரி பேசுவதுசிக்கலை ஏற்படுத்தும். இலங்கை பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு சம உ-ரிமை கிடைப்பதற்கு மத்திய அரசு -முயற்சிக்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த தேர்தலில் தனித்து தான் ஆட்சி அமைப்போம் என்று எந்த கட்சியும் கூறக் கூடாது. மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும்என்பதை தான் கருத்தில் கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பிறகு தான் கூட்டணி ஆட்சியா அல்லது தனி ஆட்சியா என்பதை முடிவு செய்ய வேண்டும்என்றார் லத்தீப்.
இவ்வாறு கூறிய லத்தீப், இந்த யோசனை ஜெயலலிதாவுக்கா என்று கேட்ட போது பதிலளிக்க மறுத்து விட்டார். தமாகா போன்ற கட்சிகள்கூட்டணி ஆட்சிக்கு வற்புறுத்தி வரும் நிலையில், தனித்து தான் ஆட்சி அமைப்போம் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதனால் அதிருப்தி அடைந்துள்ள மூப்பனார், காங்கிரசுடன் சேர்ந்து தனி அணியாக போராட -முன் வந்துள்ளார். இதை மையமாக வைத்து தான் இந்தயோசனையை ஜெயலலிதாவுக்கு லத்தீப் தெ-ரிவித்துள்ளார் என்று தெ-ரிகிறது.












Click it and Unblock the Notifications