தமிழகத்தில் இன்று
பு-லி-க-ளுக்-கு ஆத-ர-வா-கப் பேச எனக்-கு உ-ரி---மை உண்-டு: வைகோ
சென்-னை:
இலங்கை அரசுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஒரு சில கட்சிகள் பேசும்போது, யாழ்பாணத்தில் போர்க்கோலத்தில் உள்ள விடுதலைப்புலிகள் பற்றி பேச எனக்கு உரிமை இருக்கிறது என்று மதி-முக பொதுச்செயலாளர் வைகோ -கூ-றி-னார்.
திருச்சியில் வைகோ அளித்த பேட்டி:
1948ல் இருந்து 1975 வரை போடப்பட்ட அத்தனை ஒப்பந்தங்களையும் சிங்கள அரசு நிறைவேற்றவில்லை. அதனால் தான் ஆயுதக்கிளர்ச்சி ஏற்பட்டது. சமாதான -முயற்சி என்ற திரைக்குப் பின்னால் ராணுவத்தின் -மூலம் தமிழர்களை அழிக்கும் -முயற்சியில்இலங்கை அரசுஈடுபட்டு வருகிறது.
இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண தமிழ் ஈழம் அமைவது தான் ஒரே வழி. -முன்பு காங்கிரஸ் அரசு -நரடியாகவும்,மறை-முகமாகவும் சிங்கள அரசுக்கு செய்த உதவிகளை இன்றைக்கு வாஜ்பாய் அரசு செய்யவில்லை.
விடுதலைப்புலிகள் தாங்களாகவே போர் நிறுத்தம் அறிவித்தனர். சிங்கள ராணுவத்தினர் பாதுகாப்பாக வெளியேறலாம் என்றனர். ஆனால்,கடைசி சிங்கள வீரன் இருக்கும் வரை போராடுவோம் என்று இலங்கை அதிபர் சந்திரிகா கூறியிருக்கிறார்.
1995ல் யாழ்ப்பாணம் புலிகள் வசம் இருந்தது. அவர்களிடம் இருந்து அதை கைப்பற்றி விட்டு இப்போது சண்டை போடுவோம் என்றுகூறுவது எப்படி நியாயமாகும்? இலங்கை அரசுக்கு இந்தியா உதவ -முன் வந்தால், யாழ்ப்பாணத்தின் மீது பொருளாதார தடை விதிக்கக்கூடாது என்ற -நிபந்தனையுடன் தான் உதவ வேண்டும்.
இலங்கை ராணுவத்தை பாதுகாப்பாக இந்திய ராணுவம் மீட்டு அனுப்பி வைத்தால், அவர்கள் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் சண்டைபோடத்தான் போவார்கள். எனவே இலங்கையிடம் இருந்து உத்தரவாதத்தை பெற வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான் இருப்பதால், எனக்கும், பிரதமர் வாஜ்பாய்க்கும் எந்த -நருடலும் ஏற்படாத வகையில் -தான் எனதுநிலையை நான் எடுத்துள்ளேன். பல -நாடுகள் உதவியுடன் ஆயுதங்களை குவித்து போ-ரிடும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து களத்தில் -நிற்கும்புலிகள் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எனது கருத்து என்றார் வைகோ.