தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலங்கை அ-ர-சுக்-கு வாஜ்பாய் அ-றி-வு-ரை

டெல்லி:

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்கும்என்று பிரதமர் வாஜ்பாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அவர் இதுகுறித்துக் கூறுகையில், இலங்கையின் அரசியல் சட்டம், ஒருமைப்பாடு, பாதுகாப்பைஅடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வுக்கு இலங்கை முயல வேண்டும். ராணுவத் தீர்வு காண்பது இயலாதகாரியம். தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் அரசியல் தீர்வு அமைய வேண்டும்.

சுமூகமான முறையில் தமிழ் ஈழம் கிடைப்பதற்கு பலர் விரும்புகின்றனர். ஆனால் தேசிய ஜனநாயகக்கூட்டணியைப் பொருத்தவரை, அரசியல் தீர்வு ஏற்படுவதையே விரும்புகிறது. பக்கத்து நாடுகளுடன் நட்புடன்இருக்கவே இந்தியா விரும்புகிறது. எல்லை கடந்து தீவிரவாதத்தில் ஈடுபடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.சிம்லா ஒப்பந்த அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முன்வர வேண்டும்.

எதிர்காலத்தில் மேலும் அணு குண்டுச் சோதனைகளை செய்து பார்க்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை.இருப்பினும் சி.டி.பி.டி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து தேசிய கருத்து எட்டப்பட வேண்டும் என்றுவிரும்புகிறோம்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் தகுதி இந்தியாவுக்கு உள்ளது. அனைத்து நிலையிலும் இந்தவிஷயத்தில் இந்தியாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. விரைவில் நிரந்தர இடத்தைப் பெறுவோம் என்றார்வாஜ்பாய்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+